ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

குறிப்பாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது, நடப்பு ஐபிஎல் தொடரில் எனது மிகச் சிறந்த இன்னிங்ஸ்சாக நான் கருதுவது மும்பைக்கு எதிராக குவாலி ஃபயர் 2இல் 87 ரன்கள் எடுத்ததையே நினைக்கிறேன்.

அதோடு எனது பணி முடிவடையவில்லை. இறுதிப் போட்டிக்கு நாங்கள் எப்படி தயாராகிறோம் என்பது தான் மிக முக்கியம். இந்த ஆண்டு எங்களது முதல் போட்டி அகமதாபாத்தில் தான் தொடங்கியது. அதே இடத்தில் இறுதிப்போட்டியை ஆட இருப்பது எனக்கு மிகுந்த பரவசமளிக்கிறது என அவர் எமோஷனலாக தெரிவித்தார்.