
செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸும் முழுமையாக நீட் தேர்வை எதிர்கின்றதா ? ஏற்கின்றதா ? அப்ப நீட் தேர்வை எதிர்க்கவில்லை… அப்படின்னாலும் கூட்டணி வச்சிப்பீங்க.. காவேரியில் தண்ணீர் தர வில்லை என்றாலும் கூட்டணி வச்சிப்பீங்க… கச்சத்தீவை மீட்க முடியாது, கொடுத்தது கொடுத்தது தான் என சொன்னாலும் கூட்டணி வச்சிப்பீங்க. கண்ணு முன்னாடி எங்க இனம் மொத்தத்தையும் கொன்னு குவித்தாலும் கூட்டணி வைப்பீங்க. எப்படி உங்க கணக்கு எப்படி?
நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் கையெழுத்து வாங்கி அனுப்பிட்டிங்கன்னா…. நீட் நீக்கப்பட்டுருமா ? யார் நீக்குவா ? தேர்தல் வரப்போகுது… தேர்தல் வந்த போது அடுத்து வரக்கூடிய அதிகாரம் தான் அத முடிவு பண்ணனும்… அப்போ இது ஒரு நாடகமா உங்களுக்கே தெரியலையா? இதை நீங்க யாருமே பேச மாட்டேங்கறீங்க… ஏங்க இந்த நாடகத்தை தேர்தல் வரும்போது மட்டும் போடுறீங்கன்னு என காட்டமாக பேசினார்.
திமுக ஆன்மீகத்துக்கு ஆதரவானது என முதல்வர் ஸ்டாலின் பேசுனது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,
கோட்பாடு ஆரம்பிச்சது கடவுள் மறுப்பு. ஐயா பெரியார் அவர்கள் சொன்னது கடவுள் மறுப்புல, ஆரம்பிச்சது. அதுக்கு பிறகு அண்ணா ஒன்றே குலம், ஒருவரே தேவன் என சொல்லிட்டாரு. தமிழ் தேசிய இனம் வந்து ஒரு தொன்மையினம். அதுக்குன்னு ஒரு மெய்யியல் கோட்பாடு. அதுக்கு ஒரு வழிபாட்டு முறை இருக்கு. இயற்கை எமது வழிபாடு. மூத்தோர் எமது தெய்வங்கள். இந்த வழிபாட்டு முறையில் தான் வருது. எங்களுக்கு கடவுள் கிடையாது, எங்களுக்கு இறை உண்டு என தெரிவித்தார்.