இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கடிதம் ஒன்றை அனுப்பியது. இந்த கடிதம் வெறும் சம்பிரதாயங்கள் தான் என்றும், இந்தியாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா ஒப்பந்தத்தை நிறுத்தியது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர், நீர் மறுக்கப்பட்டால் போர் தொடுக்கப்படும் என்று கூறினார். மேலும் நீரை திறக்க கோரி பலமுறை பாகிஸ்தான் இந்தியாவுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இது குறித்து பேசிய சி.ஆர் பாட்டீல் சிந்து நதி நீர் எங்கும் செல்லப் போவதில்லை என்றும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார். பிலாவல் புட்டோ ஒப்பந்தம் குறித்து போர் மிரட்டல் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாட்டீல் கூறினார். ரத்தமும் நீரும் ஒன்றாக பாயும் என்று அவர் பேசினார். ஆனால் இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார்.