கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வாட்டர் பெல் என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் இதேபோன்று அரசு பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஓசூரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை அரசு பள்ளிகளின் செயல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.