
ஏர் இந்தியா AI 171 விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி புறப்பட்டு, இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையம் நோக்கிச் சென்றது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரகமாகும் இந்த விமானத்தில், 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 242 பேர் இருந்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் திடீரென கட்டுப்பாடுகளை இழந்து அங்கிருந்த மருத்துவ விடுதி மீது மோதியது. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் கரும் புகை மூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த விமான விபத்தில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் முக்கிய கருவியாக கருப்புப் பெட்டி தேடப்பட்டு வந்தது. அதன் பின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சிலரின் திட்டமிட்ட நாச வேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக ஒன்றிய அமைச்சர் முரளிதர் மோஹூல் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸில் இருந்து கிடைத்த ரெக்கார்டிங் அடிப்படையில் பல கோணங்களிலும் பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.