
குஜராத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு சில ஆண்கள் நோயாளியுடன் வந்தனர். அப்போது மருத்துவர் அந்த ஆண்களிடம் காலணிகளை கழட்டுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த நபர்கள், மருத்துவர் ஜெய்தீப்சிங் கோஹிலை(33) தாக்கினர். இதனால் அவர் காயமடைந்தார்.
அதோடு அவரது அறையில் இருந்த மருந்துகள் மற்றும் பிற பொருட்கள் சேதமடைந்தது. மேலும் குற்றவாளிகள் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஹிரென் தாங்கர், பவ்டீப் தாங்கர், கவுசிக் குவாடியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதோடு காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.