மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் முன்னாள் வார்டு உறுப்பினர் ராமச்சந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயம் அடைந்த 14 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.