பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் தான் கட்சி கொடியும் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது வருகிற 23-ஆம் தேதி விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை நீளம், அகலம் என்ன? எந்தப் பகுதியில் இருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள்? இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஏராளமான ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதா?

திருச்சி மதுரை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது? பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் மாநாட்டிற்கு வந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி இருக்கிறதா? 85 ஏக்கர் நிலம் குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அனுப்பியுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழகம் பதில் அளித்த பிறகு அனுமதியை அளிக்கப்படுமா மறுக்கப்படுமா என்பது தெரியும். மாவட்ட ஆட்சியர் பழனி மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து கூறுவார் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.