
UEFA நேஷனல் சாம்பியன் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் 2-2 என்ற நிலையில் போட்டி டை ஆனது. இதையடுத்து நடந்த பெனால்டி மேட்சில் 5-3 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடந்த 2019 க்கு பிறகு இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் மைதானத்திலேயே ரொனால்டோ ஆனந்த கண்ணீர் விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.