ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடிய வைபவ் சூரியவன்ஷி, தற்போது இந்தியா யு -19 அணிக்காக தேர்வாகி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட யுவ ஒடிஐ மற்றும் இரண்டு U 19 டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவுள்ளார். இந்த தொடர் இம்மாத இறுதியில் ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரௌண்டில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்தியாU 19 அணிக்கு 17 வயதான அயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வைபவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். ஐபிஎல் 2025-ல் வெறும் ஏழு போட்டிகளில் 252 ரன்கள் குவித்து, 206.55 என்ற அதிரடியான சராசரியுடன் ‘சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் த சீசன்’ விருதை வென்ற வைபவ், தற்போது தன் திறமையை சர்வதேச U 19 போட்டியிலும் வெளிப்படுத்த இருக்கிறார்.

 

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைபவ் கலந்து கொண்ட பயிற்சியின்போது அவர் அடித்த சிக்ஸர்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது அதிரடி ஆட்டநிலை மற்றும் ஸ்ட்ரைக் போன்றவைகள், இந்த தொடரிலும் இந்தியா வெற்றிபெறுவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.