மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 நபரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாசின் அலி ஷேக் (29) மற்றும் அப்துல் கரீம் ஷேக் (44) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரிடமும் போதை பொருளை எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.