பீகார் மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயில் ஜார்கண்ட் மாநிலம் அருகே சென்று கொண்டிருந்தது. இதில் சங்கர்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது சாலைக்கு குறுக்கே இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ரயில்வே கேட்டை உடைத்து தள்ளிவிட்டு ரயில் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டது. மேலும் என்ஜின் பெட்டி உள்பட 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அதோடு சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழிதடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.