
மத்திய ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகரில் பாங்குவில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று மாணவர்கள் பள்ளியிலிருந்து அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. இதனால் பயந்த போன மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதைத்தொடர்ந்து பள்ளி கட்டிடம் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதற்கிடையில் தீ விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களில் பலர் கவலைக்கிடமாக கிடப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார்மில் சீரமைப்பு பணி நடந்த போது திடீரென வெடித்து சிதறியது தெரியவந்தது.
இந்த சம்பவத்திற்கு அதிபர் பாஸ்டின் ஆர்க்கஞ்ச் டுடேரா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 3 நாட்களுக்கு துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார்.