இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் அவ்வழியே அவருக்கு எதிராக வந்த தெரு நாயை தாக்க முயற்சி செய்தார். அப்போது அவர் தனது ஒரு காலால் அந்த நாயை எட்டி உதைக்க முயன்ற போது நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். ஆனால் அந்த நாயோ எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றது. இந்நிலையில் அந்த நாயை அடிக்க முயன்ற மனிதருக்கு நாயின் கண்முன் நடந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவானது.

இந்த வீடியோ தற்போது இணைத்தல் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் “எதை செய்கிறோமோ, அதே தான் நமக்கு திரும்பி வரும் என்ற பழமொழிக்கு இதுதான் உதாரணம் என்று கூறி வருகின்றனர். மேலும் வாயில்லா ஜீவன்களிடம் கருணை மற்றும் விழிப்புணர்வு அவசியம் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.