மலையாளத் திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராக இருப்பவர் அனந்திகா சனில்குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிகரின் ரஜினியின் லால் சலாம் படத்தின் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது இவர் ‘8 வசந்தலு ‘ என்ற காதல் கதையில் நடித்திருக்கிறார்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் தனது இறுதி ஆசை என்ன என்பதை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் நடிப்புடன் சேர்ந்து சட்டமும் படித்து வருகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாகி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

அது தான் என்னுடைய கடைசி ஆசை எனக்கு 40 வயது ஆகும்போது அரசியலில் நுழைவது பற்றி தீவிரமாக யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.