கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அன்று மும்பை-லக்னோ போட்டி நடைபெற்றது. இதில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் கடையில் விரைவில் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டாஸ் வென்ற ஹர்திக் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஹர்திக் பாண்டியா 5 ஓவர்களை வீசியும் கூட 20 ஓவர்களில் அந்த அணி 23 ரன்கள் எடுத்தது.

மார்ஷ், மார்க்ரம் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்நிலையில் சேஸிங்கின் போது மும்பை அணியினர் செய்த ஒரு விஷயம் பூமராங் போல அவர்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. அந்த அணியின் இளம் வீரர் திலக் வருமா 23 ரன்னில் இருந்த போது அவரை Retired Out முறையில் வெளியேற்றி விட்டார்கள். ஆனால் திலக் வர்மாவிற்கு பதிலாக அவர்கள் இறக்கிய நபரைப் பார்த்து சொந்த அணியினரே அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் களம் இறக்கியது மிட்செல் சாண்ட்னர்.

அவர் உள்ளே வந்து 2 பந்துகளை சந்தித்து, 2 ரன்னை மட்டுமே எடுத்தார். இதை பார்த்த ரசிகர்கள் பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம். பேசாம விட்டிருந்தாலே மும்பை ஜெயிச்சி இருக்கும் என்று விதவிதமான கிண்டல் அடித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் வீரர் அனுமான் விஹாரி கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை சேலிங்  செய்தபோது ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அப்போது அவர் ஏன் Retired Out ஆகி வெளிவரவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதேபோன்று மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சாண்ட்னருக்காக திலக் வர்மாவை என்னை பொருத்தவரை தவறு. திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர் சிறந்த பேட்ஸ்மேனா? Pollard போன்ற அதிரடி வீரர் ஒருவருக்காக இப்படி செய்திருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.