
ஐபிஎல் 2025 தொடரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில், ஒரு ரசிகர் வைபவ் சூர்யவன்ஷியின் புகைப்படத்தை தீ வைத்து எரிக்கிறார். இதைப் பார்த்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். “ஐபிஎல்- ல் சூப்பராக விளையாடிய வைபவ் மீது எதற்காக கோபம்?” என்ற கேள்வி எழுந்தது.
View this post on Instagram
ஆனால் உண்மையான காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ரசிகர் புகைப்படத்தை பாதியளவிற்கு மட்டும் எரித்து, பிறகு அந்த எரிந்த பகுதிகளை பென்சிலால் நேர்த்தியாக வரைந்து முடித்தார். இது ஒரு கலைச் சிறப்புப் பொருளாக உருவெடுத்து, அனைவரையும் கவர்ந்தது. அந்த ரசிகர் உண்மையில் வைபவின் ரசிகராகவே இருப்பதையும், தனது கலைத்திறன் மூலம் அவரை தன்னுடைய ஸ்டைலில் கொண்டாட விரும்பியதையும் இந்த வீடியோ காட்டுகிறது.
வைபவ் சூர்யவன்ஷி, 2025 ஐபிஎல்லில் 206.55 என்ற மிக உயர்ந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளங்கியுள்ளார். இதுவே அவரை உலகளவில் பிரபலமாக்கியது. அவருக்கு அடுத்த இடங்களில் நிக்கோலஸ் பூரன் (196.25) மற்றும் அபிஷேக் சர்மா (193.39) உள்ளனர். இளம் வயதிலேயே இப்படி விளங்கி ரசிகர்களின் அன்பையும், கலைஞர்களின் பாராட்டையும் பெற்றிருப்பது வைபவ் சூர்யவன்ஷியின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இவரது எதிர்காலம் இந்திய கிரிக்கெட்டில் ஒளி வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.