
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய ஆசிரியர் நாம் அதற்கு கொல்லிமலைக்கு தான் சென்று வர வேண்டும் என ஆபாசமாக தவறான முறையில் கூறியுள்ளார். இதனால் மனமடைந்த மாணவிகள் வீட்டில் சென்று தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கடந்த வாரம் பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் ஆசிரியர் செல்வகுமார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.