மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். இவர் தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில் நரி வேட்டை என்ற படம் வெளியானது. இந்தப் படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தன்னை அறைந்து ஆபாச வார்த்தைகளை திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விபின் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் மார்க்கோ பட நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.