நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் மாவட்டத்தில் “கள்” விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது, கள் என்பது தமிழகத்தின் தேசிய பானம்.

அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்று கூட கூறுவர். எனவே ஒருநாள் நானே பனைமரம் ஏறி கள்ளிறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என தெரிவித்திருந்தார். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கள் இறக்கும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் அரசின் தடையை மீறி கள்ளிறக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது எனக்கு விருப்பமில்லை.

அதற்கான தடையை நீக்க வேண்டும். சட்டப்படி தடையை தளர்த்திவிட்டு களத்திற்கு வருவோம்” என தெரிவித்திருந்தார். மேலும் திருமாவளவன் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “பேசவேண்டிய சரியான இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என திருமாவளவன் கூறியுள்ளார். எப்போது பேசுவார் என நாங்களும் காத்திருக்கிறோம்” எனக் கூறினார்.