சென்னையில் கடந்த 2002ம் ஆண்டு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துணை மேயர் தியாகராஜன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது திமுக உறுப்பினர்கள் சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சனை எழுப்பினர். இதில் அதிமுக உறுப்பினருக்கும், திமுக உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் திமுக உறுப்பினர்கள் மை, நாற்காலி போன்ற பொருட்களைக் கொண்டு அதிமுக உறுப்பினர்களை தாக்கினர். இதில் உறுப்பினரான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு தலை, கால், கை இடங்களில் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி தற்போது அமைச்சராக இருக்கும் முன்னாள் கவுன்சிலர் மா.சுபிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் வி எஸ் பாபு, சிவாஜி, தமிழ் வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய 7 பேர்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதாவது அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.