சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.