
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கிருந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில் இளம் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை சுமார் 30 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த நிலையில் புழுக்கள் அரித்த நிலையில் பிரிட்ஜில் உடல் இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 29 வயது ஆகும் நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மால் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் வேறொரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலையில் தடவியல் நிபுணர்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக தன் காதலியை வாலிபர் ஒருவர் கொன்று துண்டு துண்டாக உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு இளம் பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.