
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. அவரது தகவல்கள் அடங்கிய FIR சமீபத்தில் வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தது குறித்து தானாக முன்வந்து வாழ்த்து சொல்லி அரசியல் நாடகம் செய்கிறார்.
பாஜகவின் வலைக்குள் விஜய் சிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் ஆசை. அதனால் தான் திடீரென தானே சென்று பாராட்டுகளை கூறியிருக்கிறார். சாட்டையால் தனக்குத் தானே கொடுத்த அடியால் விமர்சனங்களில் சிக்கி சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதிலிருந்து தன்னை வெளிக்கொண்டு வருவதற்காக தானாக முன்வந்து விஜயை வரவேற்று பேசி இருக்கிறார். மாணவிக்கு நடந்த அநீதியை குறித்து நடவடிக்கை எடுக்க கவர்னரை சென்று முறையிட்டிருப்பது ஒரு அரசியல் நிகழ்வாகும். ஆனால் கவர்னர் ஒரு சூழ்ச்சி செய்பவர். அவர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பரப்பி வருபவர். அவரது வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது. என விசிக தெரிவித்துள்ளது.