தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கடந்த 5ம் தேதி வெளியான திகோர்ட் திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இப்படம் ரூ. 315 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளது.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் அவர் தி கோர்ட் படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் தந்தையாக நடித்த விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருப்பார். சிநேகாவிற்கு முன் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நயன்தாராவை தான் தேர்ந்தெடுத்தேன். சில காரணங்களால் அவர் நடிக்க இயலாமல் போனது. மேலும், தி கோட் வெளியான பிறகு அவர் என்னை அழைத்து சினேகா அற்புதமாக நடித்திருக்கிறார், என்றும் உங்கள் தேர்வு அருமை என்றும் கூறினார். இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.