சென்னை மாதவரத்தில் சங்கர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி நேற்று வீட்டிலிருந்து, தன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில் மாதவரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த ஈச்சர் லாரி, ஸ்கூட்டரின் பக்கவாட்டில் இடித்தது. இதில் நிலை தடுமாறிய ஷாலினி கீழே விழுந்தார்.

அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர் மேல் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு லாரியின் டிரைவரான தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த கனி (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.