இமாச்சல பிரதேசத்தில் தனது தாயுடன் சேர்ந்து சாலையில் யாசகம் பெறும் வாழ்க்கையை வாழ்ந்த பிங்கி ஹரியான் என்பவரின் வாழ்க்கை, புத்த துறவி ஜம்யாங்கின் உதவியால் மாறியது. 2004ஆம் ஆண்டு, 4 வயதான பிங்கியை ஜம்யாங்க் மீட்டு, தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பள்ளியில் சேர்த்து அவருடைய கல்வியை தொடங்க உதவினார். பிங்கியின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.

தொடர்ந்து பிங்கி தனது கல்வியில் சிறந்து விளங்கியதோடு, ஜம்யாங்கின் தொண்டு நிறுவனத்தின் நிதி மற்றும் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு இடம் பெற்றார். இதுவரை இவருடைய கல்வி பயணம் கடினமானது இருந்தாலும், பிங்கி அதை தாண்டி வெற்றி பெற்றார். சமீபத்தில் பிங்கி தனது MBBS பட்டத்தை முடித்துள்ளார், இதன் மூலம் தனது கனவான மருத்துவராகி சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.