
மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சில ஆயுதக் குழுக்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில், இவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் எதிராக மோதல் போக்கு என்பது நடந்து வருகிறது.
இந்நிலையில் அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பினர் சவும் மாகாணம் டிஜிபா நகரில் உள்ள இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.