இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்கு ரூ. 2533.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட முதன்மை மொழிகளுக்கு ரூபாய் 147. 56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் விட 17 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு ரூ. 230.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் மத்திய அரசு தமிழ் மொழிக்கு வெறும் 5% க்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.