புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் சென்றுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் பிரகாஷ் உட்பட 5 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது பூச்சிக்கடை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது.

இருப்பினும் காரில் பயணம் செய்த அமைச்சர் உட்பட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவரை கட்சி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.