
திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு 50 வயது இருக்கும் என்றும், அந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.