மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. தமிழகம் எப்பொழுதும் இருமொழி கொள்கையை தான் பின்பற்றும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்தியை திணிக்கவில்லை, இந்தி அல்லது வேறு ஏதாவது மொழியை 3-வதாக கற்றுக்கொள்ள தான் கூறுகின்றோம் என்று பாஜக தலைவர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது, இந்தி நமது தேசிய மொழியாகும், ஏனென்றால் இந்தியை அதிக அளவில் பேசும் மக்களை நம் நாட்டில் கொண்டுள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களில் தான் இந்தி பேசும் மக்கள் குறைவாக உள்ளனர். போதுமான மக்கள் ஆங்கிலம் பேசாததுதான் தமிழ்நாட்டின் பிரச்சினை. நீங்கள் இந்தி பேச விரும்பவில்லை என்றால் இந்தி பேச வேண்டாம். ஆனால் இந்தி மொழியை கடுமையாக எதிர்க்க வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.