தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் பாஜக நிர்வாகிகள் பலருக்‌கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலீட்டாளர்களிடம் 2400 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் பாஜக பாடி பில்டர் ஹரிஷ் மற்றும் பாஜக நிர்வாகி மாலதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆருத்ரா கோல்டு மோசடியில் கைது செய்யப்பட்ட நடிகர் ரூசோ மத்திய அரசின் மூலம் ஆருத்ரா மோசடி வழக்கை குழிதோண்டி புதைப்பதற்காக நடிகர் ஆர் கே சுரேஷுக்கு 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மதம் தெரிவிக்காததால் ஆர்கே சுரேஷ் 12 கோடியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் எனவும் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரூசோ கொடுத்த தகவலின் பேரில் தற்போது நடிகர் ஆர்.கே சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நடிகர் ஆர்கே சுரேஷ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவரை கைது செய்தால் இன்னும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.