சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் மது போதையில் பள்ளிக்கு வருவது உள்ளிட்டவை தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் ஹரிஹரனை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்