
தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 1.17 லட்சம் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7.01 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் கே. கோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு போன்ற நிறுவனங்களில் தற்போது 1 பேர் பணிபுரிகிறார்கள்.
இவர்களில் 2022-ம் ஆண்டில் 91 முதல் 151 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 85 வீதம் பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன் பிறகு 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 195 வீதமும், அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 625 வீதமும் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த உத்தரவின் படி போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 17 லட்சத்து 129 ஊழியர்களுக்கு ரூ. 7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்க தொகையானது முதல்வரின் ஆணைக்கு இணங்க வழங்கப்பட இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.