செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது ISIS தொடர்பு இருக்கக்கூடிய ஆன்லைன் மோட்டிவேட்டட் மேல சோதனை நடத்திருக்காங்க.

கோயம்புத்தூர்ல தற்கொலைப்படை தாக்குதல் NIA  கையில கேஸ் இருக்கு. சார்ஜ் சீட் போட்டு இருக்காங்க. சென்னையில் இதற்கு முன்பு NIA ரைடு ரெண்டு, மூணு இடத்துல  நடந்திருக்கு, அதை பார்த்திருக்கோம். தமிழகத்தை பொறுத்தவரை NIA  ரைடு என்பது புதுசு கிடையாது. தேச விரோதிகள் பல பேர் இருக்கக்கூடிய புகழ் இடமாக தமிழகம் மாறி இருக்கு..  அதனுடைய தொடர்ச்சியாக இன்னைக்கும் NIA ரைடு நடக்குது.

தினம் தினம் இங்கே இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் இங்க இருக்கக்கூடிய அரசும் ஒரு காரணம்.  காவல்துறையினுடைய கையை கட்டி போட்டு இருக்காங்க.  காவல்துறைக்கு சுந்தரம் கிடையாது, காவல்துறைக்கு சுந்தரம் இல்லாத போது..  எல்லா தேச விரோதிகளும் தமிழகத்தில் வந்து தஞ்சம் புக ஆரம்பித்து இருக்கின்றார்கள். ஆகையால் NIA சோதனை முடிந்த பிறகு…  அவங்க எப்படி இருந்தாலும் ஒரு பிரஸ் நோட் கொடுப்பாங்க. யாரை பிடிச்சாங்க ? என்ன படிச்சாங்கன்னு ? அதன் பிறகு முழுமையாக இதை பற்றி பேசுவோம் என தெரிவித்தார்.