செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  இங்க இருந்து வெளியேறி போய் குடியேறுனால், அதுவும்  ஆத்தங்கரை ஆக்கிரமிப்பு என்று ஆத்தங்கரையில் நீங்களே வீடு கட்டி கொடுக்குறீங்க…  அப்போ நீங்க செஞ்சா அது சட்டம்,  நாங்க செஞ்சா குற்றமா ? நீங்களும் அதே ஆத்தங்கரைய ஆக்கிரமித்து தானே கட்டி இருக்கீங்க இப்போ…. அது எப்படி ? கொடுமையா இருக்கு இதெல்லாம்….  அரசு  இந்த முயற்சியை கைவிட வேண்டும்.

ஒவ்வொரு நாளும்…. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த போராட்டம்….  எந்த அரசு வந்தாலும் இடுச்சு இடிச்சு வெளியே தள்ளுறது… அங்க போய் வீடு தாறோம்னு… நீங்க வீடு எப்படி கட்டி இருக்கீங்கன்னு பாருங்க ? உங்கள யாராவது… ஒரு அதிகாரி… ஒரு வட்டச் செயலாளர் அல்லது மாவட்டச் செயலாளர்… ஒரு கவுன்சிலர் யாராவது ஒருவர் நீங்க கட்டிக் கொடுக்கிற குடியிருப்பில், ஒரு இடத்துல நீங்க குடியிருக்க தயாரா இருக்கீங்களா ? மக்களுக்கு கட்டிக் கொடுக்கிற இடத்தில்….

உங்களுக்கு நீங்க கட்டி இருக்கின்ற  குடியிருப்பில் நல்ல வசதியா கட்டி இருப்பீங்க…. மக்களுக்கு. தரமா கட்டி குடுக்குறீங்களா ? அந்த குடியிருப்பில் உங்களில் யாராவது குடியிருக்க தயாராக இருக்கீங்களா? எதிர்த்த வீட்ல….  இல்ல பக்கத்து வீட்ல….  சமூக நீதி பேசுறது, சகோதரத்துவம் பேசுறது, எங்க இந்த சமூக நீதி காவலர்கள் ? சகோதரத்துவம் பேசுற நாயகர்கள் எல்லாம் இங்கு வரலையே….  இந்த கவலைக்கும்,  கண்ணீருக்கும் கதறலுக்கும் உங்க கிட்ட என்ன பதில் இருக்கு ? உங்களுக்கு நாங்க வெறும் ஓட்டு,  எங்களுக்கு உயிர் இருக்கு… உணர்வு இருக்கு… அதெல்லாம் உங்களுக்கு கவலையே கிடையாது என தெரிவித்தார்.