திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, நம்ம மொழியை  தாய்மொழி என்கிறோம் ?  மொழியை அவமதிப்பது பெற்ற தாயை அவமதிப்பதற்கு சமமா ? அதுதான் தாய்மொழி. இந்திய சுதந்திரம் அடைந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் மார்வாரி மொழி எத்தனை சதவீதம் பேசினார்கள் என்றால் ? 97 சதவீதம் பேர் மார்வாரி மொழியை பேசினார்கள்.

ராஜஸ்தானின் இன்று மூன்று சதவீதம் பேர் தான் பேசுகின்றார்கள். 97% ராஜஸ்தான் மாநிலத்தின் மார்வாரி மொழியை அவர்கள் மறந்துவிட்டார்கள். குஜராத்தில் எவ்வளவு பேர் குஜராத்தி மொழி பேசுகிறார்கள். எல்லாம் இந்தி தான் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன்…யோவ் மோடி ஐயா…. மோடி ஐயா…  ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழை தக்கு..புக்கு.. தக்கு… புக்குன்னு தமிழை கொல்கிறாயே…  உன் சொந்த மாநிலத்தில் போய் குஜராத்தி பேசியிருக்கிறாயா ?

என்றைக்கு உன் தாய் மொழியை அவமதித்து… இந்தி பேசுகிறாய் என்றால் ? இந்திகாரன் தான்  ஏமாந்து ஏமாந்து உனக்கு ஓட்டு போடுகிறார். அவர்  சொந்த தாய் மொழிக்கே  அவர்  துரோகம் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது நமக்கெல்லாம் என்ன செய்வார் ? ஆப்பு தான் ஆட்டிப்பாரு உண்மையா “? இல்லையா ? என பேசினார்.