சென்னை மாவட்டத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்முறைப்படுத்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இந்த  திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இந்த  திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். வயதுவரம்பு 20 முதல் 45 குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் தகுந்த ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சென்னை வாசியாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் படி, சென்னை மாவட்டத்திற்குள் ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு பின்க் ஆட்டோ இயக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது