
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி லீட்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரால் முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவிந்தது.
பின்னர் தனது முதல் இன்னிசை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலிப் போப் 106 ரன்கள், ஹாரி புரூக் 99 ரண்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 5 விக்கெடுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் 90 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் நேற்று 4-வது ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 8 ரன் களில் அவுட் ஆனார். இதையடுத்து கே எல் ராகுல், பண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்கள் சதம் அடித்த சிறிது நேரத்திலேயே பண்ட் 118 ரண்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் கேஎல் ராகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சதம் அடித்த பண்ட் தனது ஸ்டைலில் டைவ் அடித்துக் கொண்டாடினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்ததையும் அதே ஸ்டைலில் டைவ் அடித்து கொண்டாடும்படி மைதானத்தில் இருந்த இந்திய முன்னாள் வீர சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்தார். இருப்பினும் அடுத்த முறை அப்படி கொண்டாடுவதாக பண்ட் ஜாலியாக நிராகரித்தார். கவாஸ்கரும் சிரித்தபடியே இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.