
சென்னையில் ‘தேவரா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் பேசியது, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஜான்வி, தமிழ் பேசும்போது, ‘‘வணக்கம், உங்கள் யாவரையும் நேரில் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். எனக்கு சென்னை ரொம்ப ஸ்பெஷல். எங்க அம்மாவின் சிறந்த நினைவுகள் எல்லாமே சென்னை நகரத்துடனே தொடர்புடையது’’ என கூறி, சென்னையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.

அவர் மேலும், ‘‘நீங்கள் எனக்காக காட்டிய அன்பு, என் குடும்பத்துக்காகவும், என்னை இந்த நிலைமையில் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அதே அன்பை மீண்டும் எனக்குக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜான்வி தமிழ் பேசுவது, அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானதை சுவராசியமாகக் காட்டுகிறது. தமிழ் படங்களில் அவர் நடிக்க விரும்புவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.