
அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது.
இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும் பலியாகினர். மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி பரோடாவை சேர்ந்த 51 வயதான யாஸ்மின் வோரா மற்றும் அவரது மகன் மருமகன் பர்வேஸ் வோரா மற்றும் அவரது 4 வயது மகள் பயணித்துள்ளனர். அறிக்கையின் படி யாஸ்மின் லண்டனில் வசிக்கும் தனது 2 கர்ப்பிணி மகள்களை பார்ப்பதற்காக பயணம் செய்துள்ளார். இதற்காக யாஸ்மின் தனது குடும்பத்துடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறியுள்ளார்.
முன்னதாக மனைவியை விமான நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்ற கணவனை தொடர்பு கொண்டு யாஸ்மின், விமானத்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றும், விமானத்தில் ஏதோ சரியில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினின் கணவர் சிறிது நேரத்தில் ஏசியை சரி செய்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் தான் விமான புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. லண்டனில் உள்ள தனது 2 கர்ப்பிணி மகள்களை பார்க்க ஜூன் 9-ம் தேதி திட்டமிட்டு இருந்த யாஸ்மின் துரதிஷ்டவசமாக ஜூன் 12-ம் தேதிக்கு தனது திட்டத்தை மாற்றி உள்ளார்.