
பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஸ்கூட்டியின் முன்னால் சென்று நின்றனர்.
அப்போது அதிலிருந்து ஒருவர் இறங்க, மற்றொருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் பைக்கில் இருந்து இறங்கிய அவர் திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் உள்ள தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார் ஆனால் அவருடைய கணவர் சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக அங்கிருந்த திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் அந்த தம்பதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
पंजाब के खरड़ में बदमाशों ने ओवरटेक करके स्कूटी रोकी और चेन लूटकर भाग निकले !! pic.twitter.com/rkChyhwtmE
— Sachin Gupta (@SachinGuptaUP) April 7, 2025
இது தொடர்பாக அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செய்தனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.