உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில், ஸ்னாப்சாட் சமூக ஊடகத்தின் வாயிலாக உருவான காதல் தொடர்பால் ஒரு மைனர் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜிபூரைச் சேர்ந்த லாரி டிரைவரான ராஜ் யாதவை, அந்த சிறுமி ஸ்னாப்சாட்டில் சந்தித்து காதலித்துள்ளார். மே 12ஆம் தேதி, காதலனை நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆசையால், சிறுமி வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

அதன்படி அம்ரோஹா வழியாக காஜியாபாத்தை அடைந்த அந்த சிறுமி, அங்கிருந்து ரயில் நிலையம் செல்ல பேருந்து நிலையத்தில் ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ ஓட்டுநர் மல்கான் யாதவ், தாராபூர் நசீர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர், சிறுமியிடம் நம்பிக்கையான வார்த்தையாகளை கூறி தன்னுடைய  வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மல்கான் யாதவ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து இரு நாட்கள் தங்களிடம் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாட்கள் கழித்து, சிறுமியை மீண்டும் ரயிலில் ஏற்றிக் காஜிபூருக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள், சிறுமியின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். மொபைல் ட்ராக்கிங் மூலம் போலீசார், காஜிபூரில் அந்த சிறுமியை  கண்டுபிடித்து மீட்டனர். அவருடன் இருந்த ராஜ் யாதவையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதன் பிறகு, அவருக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். ஆனால், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மல்கான் யாதவ் மீது கடுமையான பாலியல் வன்கொடுமை சட்டங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை மல்கான் யாதவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், அவருடன் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியின் சுயவிவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என சோரோ காவல் நிலைய எஸ்.எச்.ஓ கோமல் தோமர் தெரிவித்தார். இந்த சம்பவம், இன்றைய இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் முறைமை மற்றும் பாதுகாப்பின்மை குறித்து நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய அவசியம் குறித்து அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.