
தற்போது நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்தை டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு “மார்க் ஆண்டனி” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரித்துவர்மா நடிக்கிறார். அதோடு இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அண்மையில் “மார்க் ஆண்டனி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவியது.
இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று மார்க் ஆண்டனி சூட்டிங் தளத்தில் விபத்து ஏற்பட்டு உள்ளது. அதன்படி சென்னை அருகில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது லாரியை வைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பு 3 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த விபத்து குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. இந்த நிலையில் விபத்து குறித்து நடிகர் விஷால் தன் இணையப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் எனது வாழ்க்கையை தவறவிட்டிருப்பேன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Jus missed my life in a matter of few seconds and few inches, Thanks to the Almighty
Numb to this incident back on my feet and back to shoot, GB pic.twitter.com/bL7sbc9dOu
— Vishal (@VishalKOfficial) February 22, 2023