மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரான பிரவீன் நாராயணின் இயக்கத்தில் “ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா” என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மற்றும் பிரபல நடிகரான சுரேஷ்கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே பல இன்னல்களை சந்தித்துள்ளது.

அதாவது சென்சார் வாரியம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் பெயருக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் ஜானகி என்ற பெண் மாநில அரசுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துகிறார். படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்திற்கு சீதாதேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் என்பதால் சென்சார் வாரியம் இந்த திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் பிரபல இயக்குனரான உன்னிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது “ஜானகி என்ற பெயரை படத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று தணிக்கை வாரியம் பட குழுவினர்களிடம் கூறியுள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றும்படி வாரியம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சீதாதேவி என்று பெயரிடுவது சரியானதல்ல என்று வாரியம் கருதுகிறது. தற்போது ஜானகி என்ற பெயர் ஜெயந்தி என்று மாற்றப்பட்டு சென்சார் சான்றிதழ் பெறப்பட்டதாக அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாவதாக ஏற்கனவே படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்சார் சான்றிதழ் தொடர்பாக படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்சார் வாரியம் தெரிவித்ததன் அடிப்படையில் தலைப்பு மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் தொடர்பாக பட குழு முடிவு செய்த பிறகு தான் படத்தின் வெளியீடு தொடர்பான செய்திகள் தெரிய வரும்.