குஜராத்தில் ஒரு சாலை ஓர  உணவகத்திற்குள் புகுந்து கார் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெடோலி என்ற நகரில் அதிவேகமாக சென்ற கார் அங்கிருந்த ஒரு சாலையோர உணவகத்திற்குள் புகுந்தது.

இதில் உணவகத்திற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 பேர் காயமடைந்தனர். இந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மயக்கம் அடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.