திருச்சியிலிருந்து கோவையை நோக்கி தனியார் மின்சார ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து கோவை கருமத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையே ஆம்னி பேருந்தின் பாக்டரியிலிருந்து புகைமூட்டம் வந்தது.

உடனே பேருந்து ஓட்டுநர் பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். அதைக் கேட்ட பயணிகள் வேகமாக இறங்கத் தொடங்கினர். இதில் சிலரால் வேகமாக இறங்க முடியவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் லாரி ஓட்டி வந்த சபரிமலை மாற்று டிரைவர் ரமேஷ் ஆகியோர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் பேட்டரியில் இருந்து வெளிவந்த புகைமூட்டம் திடீரென தீப்பிழம்பாக மாறி பேருந்து முழுவதும் பரவியது. பின்னர் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன்(35), தரணிபதி(65) உட்பட 21 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.