இந்திய ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால், தொற்றுநோய்களைத் தூண்டும் சுகாதாரக்கேடுகள் இன்னும் பெரும்பாலான ரயில்களில் காணப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ, ரயில்களில் உணவுப்பொருட்கள் எவ்வளவு அசுத்தமாக தயாரிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு டீ விற்பனையாளர் ரயிலில் கைக்கழிப்பறை ஜெட் ஸ்பிரேயை பயன்படுத்தி தனது டீ குடுவையை கழுவும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடுவையின் மூடியானது கழிப்பறை தரையில் விழுந்து கிடந்தது.  இந்த செயல்கள், பயணிகளின் சுகாதாரத்தை பெரும் அபாயத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

கழிப்பறையின் உள்ளேயே உணவு யும் சாமான்களை கழுவுவது, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு நேரடி காரணமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் கடும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஒருவர், “ரயில்களில் விற்பனையாளர்களுக்கு சுகாதார ஞானமே இல்லை, இவர்கள் எப்படிச் சாப்பாட்டை வழங்குகிறார்கள்?” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “ரயிலில் டீ குடிக்கிறவங்க, இந்த வீடியோ பாருங்க… அந்த குடுவை எங்க, எப்படி கழுவறாங்கன்னு தெரிஞ்சுக்குங்க” என எச்சரித்துள்ளார்.

“இதனை தடுக்க ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பயணிகள் மட்டும் அல்லாது சமூக ஆர்வலர்களும் இந்திய ரயில்வே துறையிடம் வலியுறுத்தி, அனைத்து விற்பனையாளர்களுக்குமான தனித்தனியாக சுத்தமான தண்ணீர், பாதுகாப்பான கழுவும் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.