
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்தியாவுடன் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3வது போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. இதில் இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹாசன் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம் வங்காளதேசத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் அந்த அணி மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் இளம் வீரர்கள் அணிக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதுவரை 70 டெஸ்ட் தொடர்களில் ஷகிப் விளையாடியுள்ளார். இதன் மூலம் 4600 ரன்களும், 242 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஷகிப் அல் ஹாசன் ஓய்வு அறிவித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது